Friday, 21 August 2015

Unbelievable Thiruvannamalai Inner Girivalam & Nandhimuga Dharshan



Nandhimuga Dharshan : 
Nandhimuga Dharshan
Tiruvannamalai Inner Girivalam : 

Map:

Inner Girivalam Pathway map






Wednesday, 12 August 2015

சித்தர் மயம்

உலகிலேயே மிகப்பழமையான திருவண்ணாமலை!



260 கோடி வயது: திருவண்ணாமலையை ஆர்க்கேயன் காலத்தியது என்கிறார்கள். அதாவது, இந்த காலம் 200 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்த காலத்திலேயே திருவண்ணாமலை தோன்றி விட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். திருவண்ணாமலையின் வயதை இவர்கள் 260 கோடி ஆண்டுகள் என்று மதிப்பிட்டுள்ளார்கள். இது உலகிலேயே மிகப்பழமையான மலை என்று, டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். முதல் கணக்கெடுப்பின் படி மலையின் உயரம் 2665 அடி.

ரொம்ப ரொம்ப சிறந்த மாதங்கள்: திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதம் பவுர்ணமியன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். ஆனால், ஐப்பசி, கார்த்திகை, மார்கழியில் எல்லா நாட்களும் வலம் வரலாம். இவை மிகச்சிறந்த மாதங்கள் என்கிறார்கள் பெரியவர்கள். இப்போ இருக்கிற கூட்டத்துக்கு இதையெல்லாம் பார்த்தால் முடியுமா! எந்த மாசம் வந்தால்
என்ன! மனசு அண்ணாமலையார் கிட்டே இருக் கணும், என்கிறார்கள் மூத்த பக்தர்கள்.

தீபதரிசன மண்டபம்: அண்ணாமலையார் கோயிலிலுள்ள கிளிக்கோபுரம் அருகில் தீபதரிசன மண்டபம் உள்ளது. மங்கையர்க்கரசி அம்மையார் என்பவர் இந்த மண்டபத்தை 1202ல் எழுப்பினார். இதை மங்கையர்க்கரசி மண்டபம் என்றும் சொல்வர். இங்கு தான் தீபம் ஏற்றும் முன்பு,பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர்.

கரும்புத்தொட்டில்: அண்ணாமலையின் முக்கிய நேர்த்திக்கடன்களில் ஒன்று கரும்புத் தொட்டில். குழந்தை பாக்கியமில்லாதவர்கள் இங்கு கிரிவலம் வருவர். தங்களுக்கு மகப்பேறு வாய்த்தால், அந்தக் குழந்தையை கரும்புத்தொட் டிலில் இட்டு, கிரிவலம் வந்து அண்ணாமலையாரைத் தரிசிக்க வருவதாக வேண்டிக்கொள்வார்கள். இவ்வாறு செய்தால், இன்னும் பல இனிய குழந்தைகளை அந்த தம்பதிகள் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

ஆறுவிரல் ஆறுமுகம்: திருவண்ணாமலை திருப்புகழ் புலவர் அருணகிரியாருக்கு கைகளில் ஆறுவிரல் இருந்தது. அவர் ஆறுமுக பக்தர் என்பதால், அந்த முருகனே அவருக்கு அப்படி கொடுத்தான் போலும்! அவர் கால்களை சற்று உயர்த்தி எக்கி நடப்பார். அந்த நடை மயில்போல இருக்குமாம்! முருகனின் வாகனத்தை இது நினைவுபடுத்தியது.

கண்ணொளி கீரையும் உண்ணாமுலையாளும்: பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவது கண்ணுக்கு நல்லது என்பார்கள் சித்த வைத்தியத்தில்! இதை அழுத்தம் திருத்தமாக இந்தப் பகுதி மக்கள் இளசுகளுக்கு எடுத்துச் சொல்வதற்காக, பொன்னாங்கண்ணியை புளிபோட்டு கடைஞ்சா உண்ணாமுலை தாயே ஓடி வந்து சாப்பிடுவா! என்கிறார்கள். இப்படி சொன்னால் தான், இளசுகள் அம்பாளே விரும்பும் கீரையாயிற்றே என்று விரும்பிச் சாப்பிடுவார்களாம்.

மீனின் பெயர் செல்லாக்காசு: திருவண்ணாமலையிலுள்ள ரமணர் ஆஸ்ரமம் அருகேயுள்ள தீர்த்தத்தை அகத்தியர் தீர்த்தம் என்பர். இது இருக்கும் இடத்தின் பெயர் பலாக்கொத்து. இதில் வசிக்கும் மீனின் பெயர் செல்லாக்காசு. அடேங்கப்பா! இப்படி ஒரு பெயர் வைக்க என்ன காரணம் என்று கேட்டால், இது அந்தக்காலத்து மீன் சாமி! அபூர்வ இனம் சாமி, என்ற பதில் மட்டும் தான் கிடைக்கிறது.

தங்கமலை ரகசியம்: அண்ணாமலை தங்கமலையாக இருந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா? கைலாயத்தில் லிங்கம் இருப்பதால் கயிலாயம் சிறப்பு. ஆனால், லிங்கமே மலையாக இருப்பதால் திருவண்ணாமலைக்கு சிறப்பு. இந்த மலை மிகப்பெரும் புனிதமாக கருதப்படுகிறது. இதை சிவலிங்கமாக கருதி சித்தர்கள், முனிவர்கள், ஞானி களெல்லாம் வழிபட்டுள்ளனர். உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே இம்மலை உள்ளதாக தல வரலாறு கூறுகிறது. கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் தங்க மலையாகவும், இன்றைய கலியுகத்தில் கல்மலையாகவும் விளங்குகிறது.

கிரிவலம் செய்யும் முறை: திருவண்ணாமலைக்கு காந்த சக்தி இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். கிரிவலம் செல்லும்போது எங்காவது துவங்கி, எங்காவது முடிக்கக்கூடாது.மலையைச் சுற்றி 14 கி.மீ. பக்தர்கள் நடந்தே செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லக் கூடாது. கிரிவலப்பாதையில் எட்டு திசையிலும் ஒவ்வொரு லிங்கம் உள்ளது. இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயுலிங்கம், குபேர லிங்கம், ஈசான லிங்கம் ஆகிய இவற்றை வணங்கி செல்ல வேண்டும். மலையை ஒட்டிய பக்கம் செல்லாது இடது பக்கமாகவே செல்ல வேண்டும். இறைவனை தியானித்தபடியே அண்ணாமலைக்கு அரோகரா என்று மனதில் சொல்லியபடி நடக்க வேண்டும். மலையைப் பார்த்து கைகூப்பி வணங்க வேண்டும். தினமும் கிரிவலம் வரலாம் என்றாலும் பவுர்ணமியன்று கிரிவலம் வந்தால் மனோசக்தி அதிகரிக்கும்.

நந்திக்கு பெருமை: மாட்டுப்பொங்கலன்று திருவண்ணாமலை கோயிலில் உள்ள நந்திக்கு விசேஷ பூஜை நடக்கும். அனைத்து காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் நைவேத்யம் செய்து, கதம்பமாலை அணிவித்து பூஜை செய்வர்.அவ்வேளையில் அண்ணாமலையார், நந்தியின் முன் எழுந்தருளி அவருக்கு காட்சி தருவார். தனது வாகனமான நந்தியைப் பெருமைப்படுத்தும் விதத்தில் சிவன் இவர் முன் எழுந்தருள்கிறார்.

அண்ணாமலை பொருள்: அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்று பொருள். அண்ணா என்றால் நெருங்கவே முடியாதது என்பதாகும். பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் நெருங்க முடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என பெயர் வந்தது.

செந்தூர விநாயகர்: ஆஞ்சநேயருக்கு செந்தூரம் பூசி அலங்கரிப்பது வழக்கம். ஆனால், திருவண்ணாமலையில் விநாயகருக்கு செந்தூரம்பூசுகின்றனர். சம்பந்தாசுரன் என்னும் அசுரனை, விநாயகர் வதம் செய்த போது, அவனது ரத்தத்தில் இருந்து அசுரர்கள் உருவாகினர். எனவே, விநாயகர் அவனது ரத்தத்தை உடலில் பூசிக்கொண்டார். இதன் அடிப்படையில் சித்திரைப் பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில்ஓர் நாள் என ஆண்டில் நான்கு நாட்கள் மட்டும் இவருக்கு செந்தூரம் சாத்துகின்றனர்...,


                        To visit more Details:  https://www.facebook.com/MyTvmalai

Monday, 10 August 2015

Arunachaleswarar Temple


Arunachaleswarar Temple

                                    https://www.facebook.com/MyTvmalai

Tiruvannamalai is a world renowned pilgrim centre located at the foot hills of Annamalai hills. It came to be built over a period of more than thousand years. Many kings particularly the Chola and Pandiya Kings. Apart from the King Krishnadevaraya in the 15th century.

This temple city is about 80 kilometres away from Katpadi or otherwise known as Vellore. This temple can also reached from Chennai traveling to a distance of about 180 kilometres. Shiva and Parvathi are the two deities that are worshipped here at Arunachaleeswar temple. Shiva is prayed here in the form of Agni. One of the panchaboothas that is used as an element to incarnate this earth or universe.

Shiva is known by devotees as Annamalayar or Arunachaleswarar. And this is believed to be the largest temple in the world dedicated to Shiva. The history of this Annamalayar temple dates back to thousand years. Mention has been made in the Thevaram and Thiruvasagam, both great works in Tamil.

The greatness of this Arunachaleswarar temple was glorified through poems written by salivate poets Appar, Sundarar, Manickavasagar, and Sambandar. This is also well known as the Padal Petra Sthalam in Tamil besides few more temples in Tamil Nadu that enjoys this status.Many kings of those periods have contributed their share to the growth and welfare of this Arunachaleswarar temple. Construction was going on at a steady pace over the last thousand years indicating its importance and patron received by this temple from the public. It has continuously expanded due to the initiative of the kings and the public contribution.

The Arunachaleswarar temple has a unique structure with a 66 metre high gopuram consisting of thirteen storey tier. The temple has seven prakaras and nine gopurams. The tallest gopuram was built by king Krishnadevaraya in the fifteenth century and it is believed to be the second tallest gopuram in the world. This tower is called as Rajagopuram located on the eastern side. Arunachaleswarar temple is spread over 25 acres of land. Out of the seven prakaras, the first two prakaras is said to be built by the Pandiya kings and the remaining prakaras by the Cholas and other kings. It has two big tanks named as Brahma Theertham and the other as Siva Ganga Theertham. It has a massive thousand pillar hall built by the ancient kings. In the thirteenth century the Hoysala kings from Karnataka built some sannadhis and prakaras in the temple. 

The most significant factor in this temple is that lord Shiva is worshipped in the form of fire. Every year during the month of Karthikai, the flame is lit on the hill top and this ritual is witnessed by millions of devotees who gather here from all corners of the world. This festival is widely called as Karthikai Deepam in Tamil. Devotees consider greatly auspicious to witness this fire every year since Shiva or Arunachalaeswar is prayed as Agni at Tiruvannamalai.

Shiva is also called as Annamalayar and Parvathi as Apitakuchambaal by many of their devotees. This temple is also considered unique since fire being one of the five elements of Panchabootham is attributed to this Arunachalaeswarar temple and Shiva takes the form of this fire. The other elements that falls under the Panchaboothas are space (Akash), water (Jalam), wind (Vayu), and earth
(Bhoomi) 

Each of these five elements of Panchaboothas are associated to different places of worship in Tamil Nadu and Andhra. Water is associated with a temple in Thiruvanaikaval, Space is attributed to a temple at Chidambaram, Earth at Kanchipuram and Wind at Sri Kalahasthi in Andhra nearer to Tirupathi. At Arunachaleswarar age old traditions and formalities are still in vogue. When it relates to worship the local community at Tiruvannamalai are involved in the rituals. They are the temple priests, administrators, temple staff, trustees, palanquin bearers, guards, bhajan singers, musicians and other important artisans.The ceremony includes bringing the Ganga theertham on the elephant 
from the holy tank located at the southern part of the town. This water is brought through the Thirumanjana Gopuram on the south side. This water is utilized for cleaning the second prakara entrance.

Then Shiva and Parvathi are woken up and Arunachaleswarar is taken on a procession to the main temple and Parvathi is taken to Unnamalaiamman temple.Then the first pooja starts every day in the morning and conducted at regular intervals and timings for a total number of six times a day.
All devotees go round the hill and it is called Pradakshina and it is usually done during the full moon day (Pournami). About five lakh devotees go round this Annamalai hill every full moon day and it around 13 kilometres in distance. This practice of doing Pradakshina regularly helps the devotees to stay spiritually, mentally and physically fit.

Friday, 7 August 2015

Deepam Fest

Karthigai Deepam Festival

Many festivals are celebrated at Arunachaleswarar temple in Tiruvannamalai throughout the year. Among them Karthigai Deepam is the most significant festival that is celebrated with pomp and gaiety atArunachaleswarar temple.


This Karthigai Deepam is celebrated as a ten day festival and it widely known as Karthigai Brahmotsavam.
Karthigai Deepam at Tiruvannamalai

The first day - Karthika Deepam festival begins with the hosting of the flag signifying the commencement of the festival also known as Dwajaroghanam. In the morning and night Lord Arunachaleswarar will be taken out on the silver vahana for procession. The Panchamurthis(Panchamurthigal) are also taken out in the procession. The Panchamurthigal are Lord Ganapathi, Lord Murugan, Lord Sandeswarar, Lord Arunachaleswarar and Goddess Parvathi.These processions are carried out on different vahanas after the Deeparadhana is done at the kalyana mandapam.

The second day- Karthigai Deepam festival commences with the Lord Panchamurthigal coming on Indira Vimanam the chariot of Lord Indira.

The third day - Karthigai Deepam festival the ceremony begins at night with the Lord Panchamurthigal coming in procession majestically on the Simha vahana, the chariot of lion. 

On the fourth day - of Karthikai Deepam the Lord Panchamurthigal comes in the procession that starts at night on the kamadhenu vahanam. The auspicious tree Karpaviruksha is also on the side of the lord. This tree is believed to grant all the wishes that the devotees seek without fail.

The fifth day - Karthikai Deepam festival begins at night. This procession on the silver rishaba vahanam is very appealing and splendid to witness. Lord Panchamurthigal goes on this vahana that is about 25 feet tall. A big umbrella with about 17 feet in diameter is carried along in the procession.

The sixth day - Karthigai Deepam festival commences with a night procession of Lord Panchamurthigal on the silver chariot that is beautifully crafted and simply imposing when it comes around the temple.

The seventh day - of Karthikai Deepam festival Lord Panchamurthigal starts with the procession on the Maha ratham that is very huge and it almost occupies the full width of the road. This ratham is made of pure wood that is strong and rugged. 

The eight day - Karthigai Deepam festival begins at night with the Lord Panchamurthigal going out on procession on the huge horse vahana. The speciality of this horse is that all the four legs of this horse are in the air and they do not touch the ground.

On the ninth day - of Karthigai Deepam festival the devotees can witness Lord Panchamurthigal going out procession on the Kailasa Vahanam. This ceremony is mostly conducted on the ninth night.

The tenth day - Karthigai Deepam festival starts at around four o clock in the early hours and the Bharani Deepam is lit at the temple. In the evening the Mahadeepam is lit on the top of the hill at around six o clock. This is a very important ceremony during the Karthigai Deepam festival at Tiruvannamalai. Arunachaleswarar is said to be visually represented in the form of agni on the hill top. There is a very mammoth gathering on this day at the Arunachaleswarar temple to witness this glorious and sacred event. The night ceremony starts with Lord Periya nayagar going out procession on the Rishaba vahanam that is made of gold. This is another spectacular event at Arunachaleswar temple at Tiruvannamalai.


Theppal - Lord Chandrasekarar, Lord Parasakthi,Lord Subramaniar goes in the boat and this is called Theppam, since it carried out in the tank. Lord Arunachaleswarar goes procession round the hill, known as Girivalam or pradhiksahana. With this ceremony the Karthigai Deepam festival at Arunachaleswarar temple comes to a grand conclusion with the devotees taking back home some divine blessings and memories from this ancient holy city Tiruvannamalai.

                      To visit more Details:  https://www.facebook.com/MyTvmalai

Thursday, 6 August 2015

தலபுரானம்


அருணாசலேஸ்வரர் திருக்கோயில் தலபுரானம்



இறைவர் திருப்பெயர் : அருணாசலேஸ்வரர், அண்ணாமலையார். 
இறைவியார் திருப்பெயர்   : அபீதகுஜாம்பாள், உண்ணாமுலை. 
தல மரம்                                   : மகிழம்
தீர்த்தம்                                    : பிரம தீர்த்தம் 
வழிபட்டோர்                          : விசுவாமித்திரர், பதஞ்சலி, வியாக்ரபாதர், 
                                                      அகத்தியர், சனந்தனர் ஆகியோர்.  

தல வரலாறு

பஞ்சபூத தலங்களுள் நெருப்புக்குரிய தலம்.
இங்கு மலையே இறைவனின் சொரூபம்.
வல்லாள மன்னனுக்கு மகனாக வந்தவதரித்து இறைவன் அருள் செய்த பதி இதுவே.

தமிழகத்திலேயே உயர்ந்த கோபுரம்...

இத்திருக்கோயிலின்
கிழக்குக் கோபுரம் 217 அடி உயரம் - தமிழகத்திலேயே உயர்ந்து விளங்குகிறது
தெற்கு கோபுரம் - திருமஞ்சன கோபுரம்,
மேலக்கோபுரம் - பேய்க் கோபுரம்,

வடக்குக் கோபுரம் - அம்மணியம்மாள் கோபுரம் என்றழைக்கப்படுகிறது.
25 ஏக்கர் நிலப்பரப்பில் ஏழு பிரகாரங்களுடன் அமைந்துள்ள இத்திருக்கோயில் (திருவாசகத்தில்) திருவெம்பாவை பாடப்பட்ட சிறப்பினை உடையது.

கிழக்குக் கோபுரம் 217 அடி உயரம் - தமிழகத்திலேயே உயர்ந்து 
  • கிழக்கு கோபுரத்தில் நடனக் கலையும் பிறவுமாகிய சிற்பங்கள் ஏராளமாக உள்ளன.
  • கார்த்திகை தீப பெருவிழா, இத்தலத்தில் மிகவும் சிறப்புடையது.
  • உயர்ந்தோங்கிய அருணாசலத்தின் - அண்ணாமலையின் அடிவாரத்தில் கோயில் உள்ளது.
  • அருணகிரி நாதரின் வாழ்வில் அருள் திருப்பம் ஏற்படக் காரணமாக இருந்த பதி.
  • ரமண மகரிஷி தவம் இருந்து அருள் பெற்ற தலம். (ரமணர் ஆசிரமம் இத்தலத்தில் உள்ளது.)